இயற்கை அன்னை பெற்றெடுத்த இந்த உலகில் ''உயிர்'' என்ற மூன்று எழுத்தோடு
''உறவு'' என்ற பிணைப்பில் ''உடல்'' என்ற மூன்றெழுத்தில் உருவாகும் ஒரு குழந்தை
''அம்மா'' ''அப்பா'' என்று ''மழலை'' பேசுவதும் மூன்று எழுத்தில்தான்.
''ஐந்து'' வயதானதும் ''கல்வி'' என்ற மூன்று எழுத்தை ''கற்று'' , ''அறிவு'' என்ற மூன்றெழுத்தில் தேர்ச்சி அடைகின்றான்.
வாலிபப்பருவம் வந்ததும் ''இளமை'' என்ற மூன்று எழுத்தில் ''திறமை'' என்ற மூன்றெழுத்தை தேடி ''பணம்'' என்ற மூன்று எழுத்தை நாடி ''சுகம்'' என்ற மூன்று எழுத்தை அடைகின்றான்.
காளைப்பருவம் வந்ததும் ''காதல்'' என்ற மூன்று எழுத்துக்கு உயிர் கொடுக்க ''மனைவி'' என்ற மூன்றெழுத்தை அனுபவிக்கிறான்.பின்னர் ''பிள்ளை'' என்ற மூன்றெழுத்து இற்கும் ''அம்மா'' , ''அப்பா'' என்ற மூன்று எழுத்தால் அதிபதி ஆகின்றான்.''கவலை'' என்ற மூன்று எழுத்தையும் கற்கிறான்.
காலம் வந்ததும் ''வயது'' என்ற மூன்று எழுத்து அதிகரித்து ''முதுமை'' என்ற மூன்று எழுத்து மூப்படைந்து முடிவில் ''உயிர்'' என்ற மூன்று எழுத்து ''உடல்'' என்ற மூன்று எழுத்தை விட்டுப்பிரிந்து ''பிணம்'' என்ற மூன்று எழுத்தாகி ''சுடலை'' என்ற மூன்று எழுத்தில் ''உரம்'' இடுகின்றான்.
Friday, April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment